மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ள கூவத்தூர் சம்பவம்! வெற்றியடைந்த எம்.எல்.ஏக்கள் நட்சத்திர ஹோட்டலில்!

மஹாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நடைபெற்று முடிந்தும் 10 நாட்களை கடந்தும் இன்னும் ஆட்சியமைக்க பாஜகவோ, தேசியவாத காங்கிரஸோ, சிவசேனா என எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.
இந்நிலையில் சிவசேனா கட்சி தங்களுடைய எம்.எல்.ஏக்களை ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளது.  சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏக்களை ஒன்றிணைத்து தனது வீட்டிலே ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் வீட்டருகே உள்ளே நட்சத்திர ஹோட்டலில் தன் கட்சி எம்.எல்.ஏக்களை தங்கவைத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியானது தன் கட்சி ( சிவசேனா ) எம்.எல்.ஏக்களை அவர்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்குவதை தடுக்கவே MLAக்கள் நடச்சதிர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என சிவசேனா கட்சி தலைமை கூறியுள்ளது.
MLAக்களை நட்சத்திர விடுதியில் தங்கவைக்கும் இந்த நிகழ்வை பார்க்கையில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கூவத்தூர் சம்பவம் தான் நினைவுக்கு கொண்டுவருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.