பணியிடங்களில் பாலியல் புகார்கள்…!மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைப்பு …!

பணியிடங்களில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ‘மீ டூ’ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த ‘மீ டூ’ இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்
இந்நிலையில்  பணியிடங்களில் பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக அமைப்பை ஏற்படுத்தி, விதிகளை வகுக்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைத்துள்ளார். இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Comment