மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி – கே.எஸ்.அழகிரி

  • உள்ளாட்சித் தேர்தலில் எங்களது மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது  என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
  •  மேலும் அதிகார பலத்தை மீறி தி.மு.க கூட்டணி  மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் எங்களது மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது .ஆளுங்கட்சியின் அதிகார பலம் பண பலம் இவைகளையும் மீறி இன்றைக்கு அந்த வெற்றியை ஈட்டி இருக்கிறோம் என்றால் மக்கள் எங்கள் அருகாமையில் இருப்பது தான் காரணம்.

தமிழக தேர்தல் ஆணையம் இதை செய்யவில்லை ஆரம்பத்திலிருந்தே தமிழக தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுகி தான் ஒரு நல்ல தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக வழக்காடி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று தெரிவித்தார்.