சமயபுரம் மாரியம்மன் கோவிலில்.! இன்று சித்திரைத் தேர் திருவிழா கோலாகலம்..!!

திருச்சியை அடுத்த பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பால்குடம், காவடி, அக்னி சட்டி, குழந்தைகளுக்கான கரும்பு தொட்டில், முளைப்பாரி, கரகம், பறவைக் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தேரோட்டத்தின் போது வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக பக்தர்கள் மீது தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்

மேலும் செய்திகளிக்கு தினச்சுவசுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment