இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மீது புதிய புகார்!உடல் ரீதியாக சமி துன்புறுத்தல் என புகார்!கொல்கத்தா போலீசார் சம்மன்

கொல்கத்தா போலீசார்,இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் அளித்துள்ள துன்புறுத்தல் புகாரில், சம்மன் அனுப்பி உள்ளனர். தமது கணவர் முகமது சமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக ஹசின் ஜகான் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தற்போது கொல்கத்தா காவல்துறையில், ஹசின் ஜஹான் அளித்துள்ள புகாரில், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் முகமது சமி தன்னை துன்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாளை பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முகமது சமிக்கு கொல்கத்தா காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment