குடிமராமத்து பணிக்கு ரூ.499.688 கோடி ஒதுக்கீடு!  தமிழக அரசு அரசாணை

குடிமராமத்து பணிக்கு ரூ.499.688 கோடி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,குடிமராமத்து பணிக்கு ரூ.499.688 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள் ஆகிய வற்றை தூர்வாறி அகலப்படுத்துவதற்காகவும், ஆழப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.