இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் இதுவரை ரூ.4 லட்சம் பறிமுதல் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் இதுவரை ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் இதுவரை ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. ரூ.9.75 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்  ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதுகுறித்த தகவல் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்று சத்யபிரதா சாஹூ  தெரிவித்தார்.