சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்துள்ளது – சென்னை மாநகராட்சி

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதனையடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் குறைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதியில் ஏற்கனவே 66 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வெகுவாக குறைந்து 24 தெருக்களுக்கு மட்டும் ‘சீல்’வைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.