ரஃபேல் விவகாரம்:சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Related image

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. இந்த ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று கூறி கடந்த மாதம் 14-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையே தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Leave a Comment