காஷ்மீரில் ரத்தக்கறை படிந்திருப்பதற்க்கு காரணம் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான்! மத்திய அமைச்சர் அதிரடி கருத்து!

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட்டது. இதன் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவு பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்தது. இருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் பீகார் மாநிலம் பாட்னாவில் மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர காரணம். அந்த தீவிரவாதத்தால் தான் காஷ்மீரில் ரத்தக்கறை படிந்துள்ளது. விரைவில் காஷ்மீர் மாநிலம் அமைதியான மாநிலமாக மாற்றப்படும்.

பாகிஸ்தானுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் எத்தனை தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பும் என பார்ப்போம். என கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.