முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவ படங்த்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.