தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என வலம்வருபவர் ரஜினிகாந்த்.இவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு ஆண்டாக ஆகிவிட்டது.
இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.இந்நிலையில் அவரின் சகோதரர் சத்யநாராயணா,சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைத்து சிறப்பு யாகம் செய்துள்ளார்.
இந்த யாகத்தில் கர்நாடக ரஜினி ரசிகர்மன்ற தலைவர் கலந்து கொண்டுள்ளார்.ரஜினி நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழவும்,வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற கோரியும் யாகம் நடத்தியதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் கூறியுள்ளனர்.