அனைத்து கேள்விகளுக்கும் அரசியலில் நுழைந்த பிறகு பதில்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு, அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக  தெரிவித்துள்ளார்.

இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரேசி (Reasi) பகுதியில் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது, அவரைச் சந்தித்த செய்தியாளர்கள், அரசியல் தொடர்பான கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், தான் தற்போது ஆன்மீகப் பயணம் வந்துள்ளதால், அரசியல் தொடர்பாக கேட்க வேண்டாம் என்றும், அரசியலில் நுழைந்த பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன் என்று கூறினார். அரசியல் கட்சி தொடங்குவதற்காக ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு ஆன்மீகவாதி என்பதால், புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment