ரஜினி குறித்து கூறிய அழகிரி ,பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

ரஜினி குறித்து அழகிரி கூறியதை பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,மு.க.அழகிரி ரஜினியின் கருத்து குறித்து  கூறுகையில்,ரஜினி கூறியதுபோல தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது.அரசியல் வெற்றிடத்தை  ரஜினி காந்த் நிரப்புவார் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,அழகிரி, ரஜினி கருத்துகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. தேர்தலில் பார்த்துக்கொள்வோம் .நடிகர்கள் கட்சி தொடங்கலாம். ஆனால் மக்களிடம் நடிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.