ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சை பேச்சு! இயக்குனர் பா.ரஞ்சித்-க்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனையடுத்து இவர் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் போது, மக்கள் கொண்டாடும் மன்னனை பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், இயக்குனர் பா.ரஞ்சித்-க்கு முன்ஜாமீன் தர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இயக்குனர் பா.ரஞ்சித்தை புதன்கிழமை வரை கைது செய்ய மாட்டோம் என்று அரசு தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.