ஏ.என்.32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு ! 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

ஏ.என்.32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு ! 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

அருணாச்சலில் விபத்துக்குள்ளான ஏ.என்.32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது.
இன்று இந்திய விமானப் படையின் ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் மரணம் அடைந்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்தது.
இந்நிலையில் ஏ.என்.32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.பயணம் செய்த 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube