பாஜக கட்சியினர் லஞ்சம் கொடுத்ததாக பிரியங்கா காந்தி குற்றசாட்டு!

உத்திர பிரதேசம் மாநிலம், ஆமோதி தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனையடுத்து, அவரை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அமோதி தொகுதியில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வழங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

மேலும், ராகுலை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.வின் ஸ்மிருதி இராணி தேர்தலுக்காகத்தான் இத்தொகுதிக்கு பல முறை வந்து போகிறார். அவர் நாடகமாடுகிறார் அதை கிராமவாசிகள் நம்பி ஏமாறவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment