நாடுமுழுவதும் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கூறியுள்ளார் பிரதமர் மோடி-பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்தியா முழுவதும் இந்தி இருக்கட்டும்; தமிழகத்தில் தமிழ் மட்டுமே இருக்க முடியும். நாடுமுழுவதும் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கூறியுள்ளார் பிரதமர் மோடி.

அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் . நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது என்று பேசினார்.