குற்றால அருவியில் கர்ப்பிணி பெண் திடீர் மரணம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்த  சுரேஷ்குமார் இவர் மனைவி காளீஸ்வரி (20) . இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குற்றாலத்தில் குளிக்க சென்றன. மாலையில் சிற்றருவியில் இருவரும் குளித்து கொண்டிருந்த போது காளீஸ்வரி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் காளீஸ்வரி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் காளீஸ்வரியை  மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து  ஆஸ்பத்திரிக்கு வந்த  குற்றாலம் போலீசார்.

காளீஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

author avatar
murugan