வீடெங்கிலும் ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள்.!

கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் பிரதமரின் வலியுறுத்தல்படி தற்போது சரியாக 9 மணி அளவில் நாடு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடெங்கிலும் ஒற்றுமை ஒளியை ஏற்றினர். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்