பிரதமர் மோடி வேண்டுகோளுக்கிணங்க ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசியபோது , ஞாயிற்றுக்கிழமை (அதாவது இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பில் எந்த அறிவியல் காரணங்கள்  இல்லை எனவும் மக்களின் ஒற்றுமையை விளக்குவதற்கு இந்த வேண்டுகோள் என மத்திய அரசு கூறியிருந்தது.

இதையெடுத்து பிரதமர் மோடி வேண்டுகோளுக்கிணங்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமை ஒளியை ஏற்றினர்.

author avatar
murugan