பாஜக அரசு மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் – பிரதமர் நரேந்திர மோடி

பாஜக அரசு மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பிரதமர் மோடி  பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,  தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ? என்றும் நாங்களும் தோல்வி அடைந்திருக்கிறோம். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை கூறியதில்லை. காங்கிரஸ் குறை கூறுவதை பார்க்கும் போது அவர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிகிறது.
மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் முதிர்ச்சியை காட்டுகிறது.பாஜக அரசு மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் .முந்தைய காங்கிரஸ் அரசு விவசாயிகளை அவமதித்துள்ளது.
நாங்கள்  ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா என்று காங்கிரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அமேதியில் தோல்வி உறுதியானதால் வயநாட்டில் போட்டியிட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.