முதலமைச்சர் பழனிசாமியின் மாமனார்  மாரடைப்பால் மரணம்

முதலமைச்சர் பழனிசாமியின் மாமனார்  மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் சேலம்  மாவட்டத்தில் உள்ள தேவூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.இவருக்கு வயது 80 ஆகும்.இன்று திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.