உள்ளாட்சிகளில் பழைய சொத்துவரி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

உள்ளாட்சிகளில் பழைய சொத்துவரி முறையே தொடரும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்துவரியே வசூலிக்கப்படும். கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும் – மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சொத்துவரி குறைப்பிற்கு எந்த தொடர்பும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.