சரக்கு வாங்கினால் கைது.! – சென்னை போலீஸ் அதிரடி.!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. 

நாளை முதல் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாநகராட்சிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் மதுகடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மதுகடைகளை திறக்க அனுமதி அளிக்காத சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. 

சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்னைவாசிகள் சென்று மது வாங்கக்கூடாது எனவும், மது வாங்க செல்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடமருகே மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.