புதிய பாடத்திட்டங்களில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட 19 தவறுகள் திருத்தப்பட்டுள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையானது, என அச்சடிக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், புதிய பாடத்திட்டங்களில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட 19 தவறுகள் திருத்தப்பட்டுள்ளது.

மேலும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கும் போது அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனடியாக அவை திருத்தப்படும்  என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.