நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் அவரது வீட்டு பணிப்பெண் ஆகிய மூவரும் அவர்கள் வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி அனில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி அனில்குமார் சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக டிஎஸ்பி பிராங்க்ளின் ரூபன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் திருப்பூர் மாவட்ட எஸ்பியாக இருந்த ஏ.கயல்விழி உளுந்தூர்பேட்டையில் உள்ள சிறப்பு காவல்படை கமாண்டன்ட்டாக இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் நெல்லை மாநகர காவல் ஆணையர் என்.பாஸ்கரன், சென்னைக்கு இடமாற்றம்.