biggboss 3: பிக்பாஸ் வீட்டை கலவர காடாக்கிய கஸ்தூரி! நியாயத்தை பேசுங்க ஒத்துகிறேன்!

biggboss 3: பிக்பாஸ் வீட்டை கலவர காடாக்கிய கஸ்தூரி! நியாயத்தை பேசுங்க ஒத்துகிறேன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். இந்நிகழ்ச்சியில், அவர் வந்த முதல் பூகம்பம் வெடிக்க தூங்கியது. அவரின் கண்ணில் சிக்கிய முதல் பிரச்னை அபிராமி மற்றும் முகனின் காதல் தான். இவர்கள் இருக்கும் இடையே பிரச்சனையை தூண்டி பெரிய சண்டையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், மதுமிதா, வனிதாவின் வார்த்தைகளை கேட்டு, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஆண்களை மிகவும் மோசமான நிலையில் திட்டியுள்ளார். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுக்கும் கஸ்தூரிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மதுமிதாவுக்கு ஆதரவாக பேசிய கஸ்தூரி, ஒரு கட்டத்தில் கவினை அப்ப நீங்க நாலு பெரு கூட பேசி இருக்க கூடாது என கூறுகிறார். இதனால் கடுப்பான கவின் கஸ்தூரியை திட்டுகிறார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube