இதுவரை  2 கோடி பேருக்கு மேல் இணையதளம் மூலம் சான்றிதழ் பெற்றுள்ளனர் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

இதுவரை 2 கோடி பேருக்கு மேல் இணையதளம் மூலம் சான்றிதழ் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அரசு துறைகளின் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் பல்வேறு செயலிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், அரசு துறைகளின் பணிகளையும் எளிமையாக்குகிறது .இதுபோல   பல திட்டங்களை தமிழக அரசு கொண்டு வர உள்ளது.
இதுவரை  2 கோடி பேருக்கு மேல் தங்களுக்கு தேவையான சான்றுகளை, அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே இணையதளம் மூலம் வீடுகளில் இருந்து விண்ணப்பித்து வாங்கியிருக்கின்றனர் என்று தெரிவித்தார்.