பிரதமர் மோடி பேசும்போது வாய்விட்டு சிரித்த காங்கிரஸ் உறுப்பினர்!

காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா சவுத்திரி, பிரதமர் மோடி பேசும்போது வாய்விட்டு சிரித்தார்.இதற்க்கு   பிரதமர் அளித்த பதில் மாநிலங்களவையில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. ஆதார் திட்டம் வாஜ்பாய் அரசால் அறிமுகம் செய்யப்பட்டதாக பிரதமர் மோடி கூறிய போது ரேணுகா வாய்விட்டு சத்தமாக சிரித்தார் .அப்போது அவைத்தலைவராக இருந்த வெங்கய்யா நாயுடு பிரதமரை அவமதிப்பதா என கண்டனம் தெரிவித்தார்.

ஆனால் பிரதமர் மோடி குறுக்கிட்டு அவரை சிரிக்க விடுங்கள் என்றார். ராமாயணம் தொலைக்காட்சித் தொடருக்குப் பிறகு இத்தகைய சிரிப்பை இப்போதுதான் கேட்கிறேன் என்று பிரதமர் கூறிய போது மாநிலங்களவையே சிரிப்பால் குலுங்கியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment