புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை- அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் ஏற்பட்டுள்ள  குடிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாண புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது என்று அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சென்னையில் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு ஏரிகளை குடிநீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.