காட்சிகளை ஒளிபரப்புவதிலிருந்து ஊடகங்கள் விலகி இருங்கள்- ஊடகங்களுக்கு சுருக்கென்று கூறிய மத்திய அரசு

  • தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப  கூடாது என்று மத்திய அரசு சுற்றறிக்கை
  • வன்முறை மற்றும் தேசவிரோதத்திற்கு எதிரான காட்சிகளை ஒளிபரப்புவதிலிருந்து ஊடகங்கள் விலகி இருக்க அறிவுறுத்தல்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதில் வன்முறைகளும்,கலவரங்களும் ஏற்பட்டதால் சட்டம் -ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளது.இதனிடைய போராட்டங்களை தூண்டும் வகையில் மற்றும் தேசத்திற்கு எதிரான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு கடந்த 11ந் தேதி மத்திய அரசால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பபட்டது.என்றாலும் கலவரங்கள் தொடர்பான காட்சிகளை தொடர்ந்து ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளது.அதில் தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்.வன்முறை மற்றும் தேசவிரோத நடைவடிக்கை காட்சிகளை ஒளிபரப்புவதில் இருந்து ஊடகங்கள் விலகி இருக்க வேண்டும்.மேலும் ஒரு தரப்பினருக்கு எதிரான அல்லது ஆதரவான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

author avatar
kavitha