கேரளாவில் பா.ஜ.க சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி…!!

சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ததை கண்டித்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு சார்பில் கேரளாவில் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்றது. சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததைக் கண்டித்து, பல்வேறு இந்து அமைப்புகள் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

சபரிமலை பாரம்பரியத்தை காப்பாற்ற தவறிவிட்டதாக கூறி பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்று வருகிறது. பேரணியில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment