துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி  மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே அதிகாரப்போட்டி அதிகரித்து வந்தது.இதன்விளைவாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண் பேடி தலையிடக்கூடாது என்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை சார்பில் தாக்கல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என்ற உத்தரவுக்கு தடை விதிக்க  மறுப்பு தெரிவித்துவிட்டது .மேலும்  செப்டம்பர்  4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கிரண்பேடிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.