உள்ளாட்சித் தேர்தல் :திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

  • உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
  • திமுக தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்தது.இது தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட விதிகளை  முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.பின்பு திமுக தரப்பில் மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது .இதனால் உச்சநீதிமன்றம் திமுகவின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தது.

பின்னர்  டிசம்பர் 5-ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.திமுகவின் மனுவுடன் சேர்த்து புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தொடர்ந்த மனுவையும் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தது.இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை விசாரிக்க உள்ளது.