ராஜஸ்தானில் வானத்தில் இருந்து விழுந்த விண்கல் போன்ற பொருள்! பீதியில் மக்கள்!

ராஜஸ்தானில் வானத்தில் இருந்து விழுந்த விண்கல் போன்ற பொருள்.

ராஜஸ்தானின் சஞ்சூர் நகரில், வெள்ளிக்கிழமை அன்று காலை வானத்திலிருந்து விண்கல் போன்ற பொருள் விழுந்ததுள்ளது. இந்த பொருள் விழுந்த இடத்தில், ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 2 கிலோமீட்டர் தொலைவில் கேட்கும் அளவிற்கு வெடி சத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உள்ளூர்வாசிகள் இதுகுறித்து கூறுகையில், பொருள் வானத்திலிருந்து விழுந்தபோது வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த பொருள் விபத்துக்குள்ளான மூன்று மணி நேரத்திற்குப் பிறகும் வெப்பத்தை வெளியிட்டு வந்ததால், உள்ளூர்வாசிகள் விலகி இருக்குமாறு மாக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.