காங்கிரஸ் – மஜக கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது! கர்நாடக முதல்வர் குற்றசாட்டு!

கர்நாடக சட்டப்பேரவை விவகாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இன்று மாலை 6 மணிக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் முடிந்துவிட்டால் இன்றே நம்பிக்கை  வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை, இந்த சட்ட பேரவையில் தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘ காலத்தின் கட்டாயத்தினால்  அரசியலுக்கு வர ஆசை இல்லாத நான்,   அரசியலுக்குள் தள்ளப்பட்டேன்.  இந்த ஆட்சியில் பங்கெடுத்து உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.

காங்கிரஸ் – மஜக கூட்டணி ஆட்சியமைக்க தொடங்கிய நாள் முதல் பாஜக அரசு எம்எல்ஏக்கள் மீது குதிரை பேரத்தில் ஈடுபட்டது. ‘ என குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.