15 தொகுதிகளுக்கு கர்நாடகாவில் இன்று இடைத்தேர்தல்

கர்நாடகாவில் காலியாக இருக்கும் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற  நிலையில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை ஏற்ற தேர்தல் ஆணையம் தேர்தலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தது.பின்னர் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இன்னும் இரண்டு தொகுதிகளுக்கு தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஆட்சியில் பாஜக நீடிக்க வேண்டுமானால், 15 தொகுதிகளில் 6 தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும். இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.