இந்தியாவை மிரட்டும் ஜெய்ஷ்-இ-முகமது….பயணிகள் இரயிலில் குண்டுவெடிப்பு….!!

  • ஜம்முகாஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
  • உத்திரப்பிரதேசத்தில் கான்பூர் _ பிவாணி இடையே பயணிகள் இரயிலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் _ பிவாணி இடையே பயணிகள் இரயிலான கலிந்தி விரைவு ரயில் வழக்கமாக புறப்பட்டு செல்லும். கான்பூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பராஜ்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது ரயிலின் பொதுப்பிரிவு கழிப்பறை பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். மேலும் அனைத்து பெட்டிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில்  இந்தியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது.அந்த கடிதத்தில் புல்வாமா  தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு 7 மணிக்கு நடைபெற்ற தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment