சிங்களர்களுக்கு அதிகாரம் கொடுத்தது  காங்கிரஸ் கட்சி தான்- சீமான்

சிங்களர்களுக்கு அதிகாரம் கொடுத்தது  காங்கிரஸ் கட்சி தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சா.ராஜநாராயணனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது கை சின்னம் தான். சிங்களர்களுக்கு அதிகாரம் கொடுத்தது இந்த காங்கிரஸ் கட்சி தான் .
ஈழத் தமிழர்களை அழிக்க ரூ.80,000 கோடியை வட்டியில்லா கடனாக இலங்கைக்கு தந்தது கை சின்னம் தான்.நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ். அதை ஆதரித்தது திமுக. அதை செயல்படுத்தியது பாஜக என்று தெரிவித்தார்.