இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது-வெங்கையா நாயுடு

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

இதன் பின்னர் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,சென்னைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இது என்னுடைய ஒரு வீடு. ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்றால் அதில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

தமிழகம் வளர்ந்து கொண்டே வருகிறது. கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.தமிழகத்தின் சுகாதார சதவீதம் நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக உள்ளது பெருமைபடக்கூடிய விஷயம்.

இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. உலக நாடுகளுடன் பார்க்கும் பொழுது 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது .இன்று தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாதது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது என்று பேசினார்.