தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை-தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.இதனால் அமமுகவில் இருந்து திமுகவில்  இணைந்தார் தங்க தமிழ்செல்வன்.
இதனிடையே இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது  அவர் கூறுகையில்,  தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை . அடுத்த தேர்தலுக்குள் பலன்களை அனுபவிப்பதற்காகவே வெளியேறி சென்றுள்ளனர்.புதிய மாவட்ட செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியினருடன் ஆலோசனை நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.