சுவையான மைசூர் பாகு செய்வது எப்படி?

நாம் கொண்டாடும் அனைத்து விழாக்களிலுமே பலகாரங்கள் முதன்மையான இடத்தை பிடிக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் அசத்தத்தாலான மைசூர் பாகு  எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கடலைமாவு – 250 கிராம்
  • சீனி – 750 கிராம்
  • சோடா உப்பு – 1 சிட்டிகை
  • டால்டா – 750 கிராம்

செய்முறை

முதலில் அடி கனமான பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் கடலைமாவை ஒரு கையால் தூவிக் கொண்டே, கட்டி சேராமல் கிளறி கொண்டே இருக்க  வேண்டும்.
பின் மற்றோரு அடுப்பில்  டால்ட்டாவை உருக்கி, அதனை இடையிடையே கலவையில் சேர்த்து கிளார்க் கொண்டே இருக்க வேண்டும். பின் டால்ட்டாவை வெளியே தள்ளி பொங்கி வரும்போது சிறிது சோடா உப்பு போட்டு கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி கரண்டியால் தேய்த்து விட்டால் மைசூர் பாகு ரெடி.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.