நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இந்த விருது 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.அதில் ஒருவர் அபிஜித் பானர்ஜீ ஆவார்.இவர் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.நோபல் பரிசு வாங்கும் பெண்மணியான எஸ்தர் டூஃப்லோ, அபிஜித் பானர்ஜியின் மனைவி ஆவார்.
இந்த நிலையில் இன்று நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் பிரதமரின் பதிவில் ,மனித மேம்பாட்டிற்கான ஆர்வம் அபிஜித் பானர்ஜீயிடம் உள்ளது.பல்வேறு துறை குறித்து ஆரோக்கியமான  உரையாடல் நடத்தினோன் என்று மோடி தெரிவித்துள்ளார்.