இந்திய அணியில் 4வது இடம் இவருக்கு தான் சரியாக இருக்கும்.. கம்பிர்

  • இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார்.
  • இதற்காக, பிசிசிஐ நிர்வாகம் மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கெதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு அனைவரையும் உபயோகித்து பார்த்தும் திருப்தியடையவில்லை.

இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு ராயுடு சரியாக இருப்பார் என கம்பீர்கருத்துதெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட உலககோப்பைக்கு இவர்கள் தான் இந்திய அணியில் ஆடுவார்கள் என உறுதியாகிவிட்டது. ஆனால், நடுத்தர பேட்டிங் வரிசையை இந்திய அணி பலப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. 5வது 6வது இடத்திற்கு ஓரளவிற்கு உறுதியாகி விட்டாலும், 4வது இடம் இன்றளவும் கேள்விக்குறியாக உள்ளது.

இதற்காக, பிசிசிஐ நிர்வாகம் மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கெதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு அனைவரையும் உபயோகித்து பார்த்தும் திருப்தியடையவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடும் இந்திய வீரரை இந்திய அணியின் 4வது இடத்திற்கு எடுக்கலாம் என்ற நிலையில் இருந்து வருகிறது.

இதற்க்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் கருது தெரிவித்துள்ளார். கூறியதாவது, “ஒரு வருட காலமாக தோனி 4வது இடத்தில் சரியாக ஆடாத போதும் அவரை தொடர்ந்து இந்திய நிர்வாகம் பயன்படுத்த தயாராகிறது. ராயுடு கிட்டத்தட்ட 50 ரன்கள் சராசரியை கொண்டிருக்கிறார். அவர் 3 போட்டிகளில் மட்டுமே சொதப்பலாக ஆடியிருக்கிறார். அவரை இன்னும் முயற்சிக்க நான் கோருகிறேன். அவர் தான் அந்த இதற்க்கு சரியாக இருப்பார்” என ராயுடுவைசப்போர்ட்செய்துகம்பீர்பேசினார்.

author avatar
Vignesh

Leave a Comment