மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பன்னீர் செல்வம்….

  • மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி துவங்குகிறது.
  • மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பன்னீர் செல்வம்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும், தேர்தல் பிரச்சாரத்தில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் மதுரை அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளார்.

மேலும், தேனீ தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத் குமாருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment