ரசிகர்களே இல்லாத காலி மைதானத்தில் ஐ.பி.எல் விளையாட தயார்.! – ஹர்பஜன் சிங் அதிரடி.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் சூழலில் ஐ.பி.எல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்து வருகின்றன. 

முன்னதாக ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிதிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு வரும் 14ஆம் தேதி தான் முடிகிறது என்பதால் , உடனடியாக ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால், இந்த ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என ஐபிஎல் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ‘ ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட தயார். இதனால், ரசிகர்கள் டிவியிலாவது போட்டிகளை பார்த்து மகிழ்வார்கள். என தெரிவித்துள்ளார். 

மேலும், ‘ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், மைதானத்தில் வீரர்களின் தங்கும் அறை உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியானவுடன் விரைவில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.’ எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.