ஜி.எஸ்.டி. வரி குறைப்பு குறித்து ஆலோசிக்கப்படும்  – அமைச்சர் ஜெயக்குமார்

62 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்  39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  இன்று நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானம் நிலையத்திற்கு சென்றார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 
62 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து வலியுறுத்தப்படும் .ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, வரி விலக்கு குறித்து ஆலோசிக்கப்படும்  என்று தெரிவித்தார் .