ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம்!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் வராகி அம்மன், பெருவுடையார், பிரகன் நாயகி அம்மன் சன்னதிகளில் ஆளுநர் தரிசனம் செய்தார்.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை பார்வையிடும் ஆளுநர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்து, எம்.ஜி.ஆரின் பன்முகப்பார்வை என்ற நூலை வெளியிடுகிறார். பிற்பகலில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் பன்வாரிலால் புரோகித், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்களையும் சந்திக்கிறார். பின்னர், திருவையாறில் தியாகராஜரின் 171-வது ஆராதனை விழாவை ஆளுநர் தொடங்கி வைக்கிறார்.
source: dinasuvadu.com

Leave a Comment