பாஜக சார்பில் இன்று போராட்டம் ! பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் தீவிரம்

குடியுரிமை திருத்த  சட்டத்துக்கு ஆதரவாக  தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது .எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான்,மேற்கு வங்க மாநில சட்டமன்றங்களில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலயில் குடியுரிமை திருத்த  சட்டத்துக்கு ஆதரவாக  தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தி,ல்பாஜக  மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று  பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.